நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட வாய்ப்புகள்  மடானி அரசாங்கத்தின் ஓர் அங்கமா என எனக்கே தெரியவில்லை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்

சுங்கைபூலோ:

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட வாய்ப்புகள் மடானி அரசாங்கத்தின் ஓர் அங்கமா? என எனக்கே தெரியவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

இந்த ஆண்டு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்கு விண்ணப்பித்த, வழங்கப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை கல்வியமைச்சு விரிவாக விவரிக்க வேண்டும்.

மெட்ரிகுலேஷன் திட்டத்தில் மிகப் பெரிய தெளிவின்மை உள்ளது.  குறிப்பாக எத்தனை இடங்கள் வழங்கப்பட்டன. 

எத்தனை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். எத்தனை மாணவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்பது வெளிப்படையாக இல்லை.

இதன் அடிப்படையில்தான் மஇகா சார்பில் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.

காரணம் மடானி அரசாங்கத்தில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் ஓர் அங்கம் தான்.

எனக்கே இது குறித்து தெரியவில்லை என்றால் நான் எப்படி சமுதாயம் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்க முடியும்.

ஆக இக் கடிதத்திற்கு கல்வியமைச்சர் உரிய பதில் வழங்க வேண்டும். 

கல்வியமைச்சரின் இந்த பதில் இந்திய சமுதாயத்திடையே உள்ள மிகப் பெரிய கேள்விகளுக்கு பதிலாக இருக்கும்.

கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த பின் டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இருந்தார். இதனால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அவ்வப்போது பதில் கிடைத்தது.

ஆனால் இப்போது அமைச்சர் இல்லாததும் நமக்கு பின்னடைவு தான் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset