
செய்திகள் மலேசியா
ஊழலுக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளால் அசாம் பாக்கியின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது: பிரதமர் அன்வார்
ஜொகூர் பாரு:
ஊழலை எதிர்த்துத் துணிச்சலாகப் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த நடவடிக்கை விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், பெரிய ஊழல் வழக்குகளைக் கையாள்வதில் அசாம் முன்னெப்போதும் இல்லாத அளவிலான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
பல தசாப்தங்களாக எம்ஏசிசியின் செயல்திறனைப் பார்க்கும் போது, அந்த ஆணையம் பெரிய நிறுவனங்களை சோதனை செய்யத் துணிந்தது இதுவே முதல் முறை என்று அன்வார் மேலும் கூறினார்.
நாளை அவரை மாற்றி, எனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் இதைப் பற்றி விவாதிக்க முடியும்.
ஆனால் புதிய நபர் பில்லியன் ரிங்கிட் வைத்திருக்கும் ஒருவரை எதிர்கொள்ளத் துணிவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை ன்று அவர் கூறினார்.
பெர்சாடா ஜோகூர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிகேஆர் பொதுக் கூட்டத்தில் தனது கொள்கை உரையின் போது அன்வார் இதைக் கூறினார்.
முன்னதாக, மே 9-ஆம் தேதி நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், அசாமின் பணிக்கால ஒப்பந்தம் மே 13, 2025 முதல் மே 12, 2026 வரை ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இந்த மறு நியமனத்திற்கு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am