நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் டிசம்பர் மாதம் முதல் மின்னியல் சிகரெட்டுக்குத் தடை

அலோர் ஸ்டார்:

கெடாவில் டிசம்பர் மாதம் முதல் மின்னியல் சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் மன்சோர் ஜகாரியா கூறினார்.

திட்டமிட்டது போல் டிசம்பர் மாதம் மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

மின்னியல் சிகரெட்டை விற்பனை செய்யும் வணிகர்கள் மாற்று வணிகங்களுக்கு மாறுவதற்கு இந்த 7 மாதக் கால அவகாசம் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார். 

இவ்வார தொடக்கத்தில் மாநிலத்திலுள்ள அனைத்து உள்ளூர் அதிகாரிகளுடனும் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மன்சோர் கூறினார்.

முன்னதாக, மின்னியல் சிகரெட் விற்பனையாளர்களுக்கான எந்தவொரு வணிக உரிமங்களையும் மாநில அரசு புதுப்பிக்காது என்று கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி நோர் கூறினார். 

முழுமையான தடைக்கு இணங்கவும், மாற்று வணிக வடிவங்களுக்கு மாறவும் கூடுதல் அவகாசம் தேவை என்று வணிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset