
செய்திகள் மலேசியா
கெடாவில் டிசம்பர் மாதம் முதல் மின்னியல் சிகரெட்டுக்குத் தடை
அலோர் ஸ்டார்:
கெடாவில் டிசம்பர் மாதம் முதல் மின்னியல் சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் மன்சோர் ஜகாரியா கூறினார்.
திட்டமிட்டது போல் டிசம்பர் மாதம் மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
மின்னியல் சிகரெட்டை விற்பனை செய்யும் வணிகர்கள் மாற்று வணிகங்களுக்கு மாறுவதற்கு இந்த 7 மாதக் கால அவகாசம் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வார தொடக்கத்தில் மாநிலத்திலுள்ள அனைத்து உள்ளூர் அதிகாரிகளுடனும் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மன்சோர் கூறினார்.
முன்னதாக, மின்னியல் சிகரெட் விற்பனையாளர்களுக்கான எந்தவொரு வணிக உரிமங்களையும் மாநில அரசு புதுப்பிக்காது என்று கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி நோர் கூறினார்.
முழுமையான தடைக்கு இணங்கவும், மாற்று வணிக வடிவங்களுக்கு மாறவும் கூடுதல் அவகாசம் தேவை என்று வணிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am