
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேசியப் பேராளர் மாநாடு இன்று தொடங்குகிறது
ஜொகூர்பாரு:
2024 - 2025ஆம் ஆண்டுகளுக்கான கெஅடிலான் தேசியப் பேராளர் மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
கெஅடிலான் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு கூட்டங்களை ஒரே நேரத்தில் டாக்டர் புசியா சாலே திறந்து வைப்பதன் மூலம் இம் மாநாடு தொடங்குகிறது.
மாநாட்டின் தொடக்கம் ஜொகூர் பாருவில் உள்ள பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் அட்லி, மகளிர் பிரிவுத் தலைவர் ஃபட்லினா சிடேக் உட்பட இரு பிரிவுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
இரு கட்சிப் பிரிவுகளும் நாளை அந்தந்த மாநாடுகளைத் தொடங்கும். ஆடம் அட்லி, ஃபட்லினாவின் முக்கிய உரைகளும் மாநாட்டில் இடம் பெறும்.
இதைத் தொடர்ந்து பிரிவுத் தலைவரின் கொள்கை உரை குறித்த விவாத அமர்வு நடைபெறுகிறது.
பின்னர் செயலாளர், துணைத் தலைவர், உதவுத் தலைவர் மற்றும் அந்தந்த பிரிவுத் தலைவர்களால் நிறைவு அமர்வு நடைபெறும்.
மத்திய உச்சமன்ற தலைவர்கள், இளைஞர், மகளிர் தலைமைத்துவ குழு தேர்தல்களை உள்ளடக்கிய மத்திய அளவிலான தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதன் உச்சக்கட்டமாக கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதே நாள் மாலையில் ஜொகூர் பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கொள்கை உரை நிகழ்த்தி தேசிய பேராளர் மாநாட்டைத் திறந்து வைக்க உள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am