நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவையில் இருந்து வெளியேற விரும்பும் தலைவர்களை தடுக்க மாட்டேன்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

அமைச்சரவையில் இருந்து வெளியேற விரும்பும் தலைவர்களை ஒருபோதும் நான் தடுக்க மாட்டேன்.

பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கெஅடிலான் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

ஆனால் அதன் பிறகு பதவி விலக விரும்பும் எந்தத் தலைவரையும் என்னால் தடுக்க முடியாது.

கட்சித் தேர்தல் நெருங்கிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் இடையேயான போட்டி என்பதால், அமைச்சரவை உறுப்பினர்களில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.

இது நெருங்கிய நண்பர்கள், சக பணியாளர்களுக்கு இடையிலான போட்டி. இதனால் அமைச்சரவையை மாற்றியமைப்பது என்ற பிரச்சினை எழவே இல்லை.

அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தேர்தலில் தோல்வியடைந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட எவரையும் என்னால் தடுக்க முடியாது.

நீங்கள் என்னைக் கேட்டால், எந்த மறுசீரமைப்பையும் செய்வதற்கான திட்டம் இப்போதைக்கு இல்லை.

புத்ராஜெயாவின் ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான பிரதமரின் விளக்க அமர்வில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset