நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய நெகிரி செம்பிலான் அரசாங்கம் பரிசீலனை

சிரம்பான்: 

மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அம்மாநிலத்தின் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் கூறினார். 

பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் மிரட்டலாக உள்ள இந்த மின்னியல் சிகரெட் பயன்பாடு குறித்து மாநில அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது. 

இந்நிலையில் மாநில அரசு கூட்டத்தில் இந்த மின்னியல் சிகரெட் விற்பனை தடை செய்வதற்கான விவகாரம் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். 

இருந்தபோதிலும், மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சு ஏற்கனவே ஆலோசனையைக் கூறியிருந்தது குறிப்பிடத்தகக்கது. 

முன்னதாக, பெர்லீஸ், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் மின்னியல் சிகரெட் விற்பனை தடை விதிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் அறிவித்திருந்தன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset