
செய்திகள் மலேசியா
சபா மாநிலத்திற்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்; சபா மாநில ஆளுநர் துன் முசா ஹசானைச் சந்திக்கிறார்
கோத்தா கினாபாலு:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சபா மாநிலத்திற்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சபா மாநிலத்திற்கு காலை வேளையில் சென்றடைந்தார்.
காலை 10.35 மணிக்கு சபா கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரதமரைச் சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் வரவேற்றார்.
PROGRAM MADANI RAKYAT 2025 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவும் TAMU DESA SABAH திட்டத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கவும் பிரதமர் அன்வார் சபாவில் தற்போது இருக்கிறார்.
மேலும், சபா மாநில ஆளுநர் துன் முசா ஹசானை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திக்கவும் அட்டவணையிடப்பட்டுள்ளது.
-மவித்திரன்