
செய்திகள் உலகம்
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
கோலாலம்பூர்:
விற்பனை மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்குப் பொறுப்பு வகிக்கும் வணிகப் பிரிவில் வேலை செய்யும் 200 ஊழியர்களைப் கூகுள் பணிநீக்கம் செய்துள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவு மையங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இருப்பதால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவையாற்றுவதற்கும் கூட்டுத் தொழில் திட்டங்களுக்கு வழிவகுப்பதற்கும் மாற்றங்கள் செய்துவருவதாய் கூகுள் கூறியது.
கடந்த மாதம் மென்பொருள், கருவி தயாரிப்புப் பிரிவுகளிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை Google ஆட்குறைப்புச் செய்ததாக The Information செய்தி நிறுவனம் குறிபிட்டது.
ஜனவரி 2023-ஆம் ஆண்டில் Google நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் Alphabet நிறுவனம், உலகளவில் அதன் ஊழியர் எண்ணிக்கையை 6 விழுக்காடு குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.
கடந்த ஆண்டு நிலவரப்படி அதன் ஊழியர் எண்ணிக்கை சுமார் 183,000ஆக உள்ளது என ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் அதிக செலவிடும் காரணத்தால் Meta, Microsoft, Amazon, Apple போன்ற நிறுவனங்கள் மற்ற செலவுகளைக் குறைக்க முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm