
செய்திகள் மலேசியா
உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்த கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுள்ளது: தங்கராஜ்
கோலாலம்பூர்:
உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்த கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுள்ளது.
அந்நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் இதனை கூறினார்.
கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனம் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.
அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டு மே தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இம்முறை வழக்கறிஞர் பாண்டித்துரை இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
மே தினம் தொழிலாளர்களை கொண்டாடும் தினமாகும். அதன் அடிப்படையில் இன்று தொழிலாளர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.
கேகேபி கூட்டுறவு நிறுவனம் நாட்டின் முன்னணி கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கும் இக்கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களின் நலத் திட்டத்திலும் முழு கவனம் செலுத்த வருகிறது.
அதன் அடிப்படையில் 5 ஆண்டு திட்டத்தை கொண்டு கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று தங்கராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹாரி
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேசியா
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இருக்கும்
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ளி அஹ்மத்
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm