நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமர் அன்வார்

அன்காரா:

மலேசியா, துருக்கியே நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு உண்மையான அர்த்தத்தை அளிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

துருக்கிக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் முக்கியத்துவம், மலேசியாவிற்கும் குடியரசுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு, ராஜதந்திரம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

மலேசிய புலம்பெயர்ந்தோருடனான காசே மடானி விழாவில் பேசிய பிரதமர், 

துருக்கியே அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடனான நெருங்கிய தனிப்பட்ட, ராஜதந்திர உறவின் அடிப்படையில் இந்த விஜயம் அதன் சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றார்.

இந்த வருகையை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். 

ஜனவரியில் நான் வரவில்லை என்றால், அவர் நண்பர்களாக இருக்க விரும்பமாட்டார் என்று அதிபர் எர்டோகன் நகைச்சுவையாகக் கூறினார்  என்று பிரதமர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset