
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் விசாரணைக்காக 3 குழாய்கள்அகற்றப்பட்டன; மேலும் ஒன்று செயல்பாட்டில் உள்ளது: போலிஸ்
புத்ரா ஹைட்ஸ்:
ஏப்ரல் 1 ஆம் தேதி இங்குள்ள புத்ரா ஹைட்ஸில் தீப்பிடித்து வெடித்த மூன்று எரிவாயு குழாய்கள் விசாரணை நோக்கங்களுக்காக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் இதனை கூறினார்.
இதில் 32 அங்குல அகலமுள்ள இரண்டு குழாய் துண்டுகள் ஆறு மீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டன. மற்றொரு குழாய் நான்கு மீட்டர் நீளம் கொண்டது.
இதுவரை, எரிவாயு குழாய் வெட்டப்பட்ட மொத்த நீளம் 16 மீட்டர் ஆகும். மீதமுள்ள பகுதியை வெட்டுவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,
இது நான்கு முதல் ஐந்து மீட்டர் நீளம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட குழாய்தான் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் வெடித்தது கண்டறியப்பட்டது.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய குழாய்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
முன்னதாக சம்பவம் நடந்த இடத்தின் தரையை ஆழப்படுத்தவும், தரை மேற்பரப்பில் இருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் குழாயை வெட்டவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிறுவனங்களும் 29 நாட்கள் எடுத்துக் கொண்டதாக அறியப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 11:20 am
LGBTQ கலாச்சாரத்தை இயல்பாக்கும் முயற்சிகளை அரசாங்கம் நிராகரிக்கிறது: நயிம் மொக்தார்
May 29, 2025, 11:18 am
தென்கிழக்காசியாவில் இருதய நோயாளிகள் எண்ணிக்கை 148% அதிகரிப்பு
May 29, 2025, 10:28 am
உலகின் தலைசிறந்த மருத்துவச் சுற்றுலா மையமாக மலேசியா தேர்வு
May 28, 2025, 9:32 pm
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவியை ஏற்க டத்தோஸ்ரீ ரமணனே சரியான தேர்வாக இருப்பார்: அஹ்...
May 28, 2025, 6:12 pm
சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் ரயில் சேவைகளின் கால அட்ட...
May 28, 2025, 6:10 pm
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கோபி...
May 28, 2025, 6:03 pm
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது; மோதலை அல்ல: சைபுடின்
May 28, 2025, 6:02 pm
ரபிஸி எங்கு சென்றாலும், அவரது கருத்துக்கள் மறக்கப்படாது: நூருல் இசா
May 28, 2025, 4:44 pm
இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹமத...
May 28, 2025, 3:39 pm