
செய்திகள் மலேசியா
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மலேசியா உறுதிப்பாடு கொண்டுள்ளது: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
கோலாலம்பூர்:
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 45 விழுக்காடு கார்பன் காற்றைக் குறைக்க மலேசியா அதன் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலக பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் நிலையும் நாட்டின் இலக்காக உள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சிறப்பு மாநாடு ஒன்றில் மலேசியா கலந்து கொண்டது. இந்த கூட்டத்திற்கு ஐநாவின் பொது செயலாளர் அந்தோனியோ குத்தெரெஸ் தலைமை தாங்கினார்.
இதன் வாயிலாக, மலேசியா 45 விழுக்காடு கார்பன் காற்றை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில் 2050ஆம் ஆண்டில் சுழியம் விழுக்காடு கார்பன் நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அன்வார் இர்பாஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிராந்திய பருவநிலை நடவடிக்கையை நிலைப்பெற செய்ய ஆசியான் நிர்வாகியாக மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது. இதனால் ஆசியான் பசுமை புத்தாக்க, மற்றும் முதலீட்டு நடவடிக்கைக்கு உகந்த இடமாக இருக்கும் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am