நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு கோலாலம்பூர் - ஜோகூர் பாரு இடையே 8 மணி நேர போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அதிருப்தி

கோலாலம்பூர்

கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு ஜோகூர் பாரு (JB) இருந்து கோலாலம்பூர் (KL) செல்லும் போது 8 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாக மலேசியர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்  

டிக் டாக் வீடியோ ஒன்றில், ரிட்ஜாம் யாஹ்யா அவர்கள், டிசம்பர் 28 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜோகூர் பாருவிலிருந்து புறப்பட்டு, இரவு 10.50 மணிக்கே ஷா ஆலாமை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக சுமார் 4 மணி நேரமே ஆகும் 341 கி.மீ. கொண்ட இந்த பயணமானது  ரிட்ஜாம் மற்றும் அவரது குடும்பத்திற்கு 8 மணி 50 நிமிடங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.

அவரது வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 370 கருத்துகளையும் பெற்ற நிலையில், பல நெட்டிசன்கள் தங்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக பகிர்ந்தனர்.

“இன்று (டிசம்பர் 28) பிற்பகல் 1 மணிக்கு ஜோகூர், டெசாருவிலிருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கே மலாக்காவை அடைந்தேன்,” என ஒரு டிக் டாக் பயனர் எழுதினார். மற்றொருவர், “நான் இப்போது தான் மலாக்காவிலிருந்து திரும்பினேன். ஜோகூர் பாருவிலிருந்து மலாக்காவுக்கு செல்ல 6 மணி நேரம் எடுத்தது,” என குறிப்பிட்டார்.

போக்குவரத்து நெரிசலால் ஒரு நெட்டிசன் சாலையில் 11 மணி நேரம் கழித்ததாகத்  தெரிவித்துள்ளார்.

“ செனாய், ஜோகூரிலிருந்து ராவாங், சிலாங்கூருக்குச் செல்ல 11 மணி நேரம் எடுத்தது. கார் விட்டு இறங்கிய போது,  நிற்க கூட முடியாத அளவுக்கு சோர்வாக இருந்தேன்,” என ஒருவர் பகிர்ந்துள்ளார்.

சியாவோஹொங்க்ஷு (Xiaohongshu) என்பவர், ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் செல்ல 7 மணி நேரம் எடுத்ததாக பகிர்ந்துள்ளார். மற்றொரு பயனர், குளுவாங், ஜோகூரிலிருந்து கோலாலம்பூர் செல்லும் பயணம் 6 மணி நேரத்தை கடந்துவிட்டதாகவும், இன்னும் சென்று சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset