
செய்திகள் மலேசியா
இளம் பெண் கடத்தல் வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
சிரம்பான்:
ஏப்ரல் மாத தொடக்கத்தில் 16 வயது இளம் பெண்ணை கடத்தி 2 மில்லியன் ரிங்கிட் பணம் கேட்ட சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இங்குள்ள சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இருப்பினும், நீதிபதி டத்தின் சுரித்தா புடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து அவர்கள் அனைவரும் விசாரணையைக் கோரினர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 16 வயது இளைஞரை கடத்தி பணம் கோரியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் தேதி சிரம்பான் UPTOWN AVENUE பகுதியில் மாலை 5.45 மணிக்கு இந்த நடவடிக்கையைப் புரிந்தனர்.
1961 கடத்தல் சட்டத்தின் செக்ஷன் 3(1)இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறை தண்டனை, பிரம்படிகளும் விதிக்கப்படும்.
இந்த சம்பவம் குற்றவியல் அம்சத்தை கொண்டிருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட யாவருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 9:32 pm
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவியை ஏற்க டத்தோஸ்ரீ ரமணனே சரியான தேர்வாக இருப்பார்: அஹ்...
May 28, 2025, 6:12 pm
சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் ரயில் சேவைகளின் கால அட்ட...
May 28, 2025, 6:10 pm
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கோபி...
May 28, 2025, 6:03 pm
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது; மோதலை அல்ல: சைபுடின்
May 28, 2025, 6:02 pm
ரபிஸி எங்கு சென்றாலும், அவரது கருத்துக்கள் மறக்கப்படாது: நூருல் இசா
May 28, 2025, 4:44 pm
இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹமத...
May 28, 2025, 3:39 pm
அவசரக் கால மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஆசியான் நடவடிக்கை
May 28, 2025, 3:38 pm
எதிர்கால வெற்றியின் அளவுகோலாகச் செயற்கை நுண்ணறிவு அமையும்: தெங்கு ஜஃப்ருல்
May 28, 2025, 2:38 pm
புருனை சுல்தானின் உடல்நிலை சீராகவுள்ளது: பிரதமர் அன்வார்
May 28, 2025, 2:26 pm