செய்திகள் இந்தியா
சவுதி பயணம் பாதியில் ரத்து: பிரதமர் மோடி இந்தியா விரைவு
ஜித்தா:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா விரைகிறார்.
இன்று புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பின் பெயரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட உள்ளதாகவும் புதன்கிழமை அதிகாலை அவர் இந்தியா வந்தடைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 1:02 pm
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026, 12:09 pm
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
March 15, 2026, 4:47 pm
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
