செய்திகள் இந்தியா
பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெல்காம் சென்றடைந்தார்
பஹல்காம்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அரசுமுறைப் பயணமாக சவுதி சென்றிருக்கும் பிரதமர் மோடி, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
May 27, 2026, 2:11 pm
ஈரானில் தடுத்து வைக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
