
செய்திகள் இந்தியா
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
மும்பை:
மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவர் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்தியைத் திணிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக அந்த மாநில எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவும் ஹிந்தி எதிர்ப்பை தீவிரமாக நடத்தி வருகின்றன.
மும்பை புறநகர் பகுதியில் இந்த இரு கட்சியினரும் ஹிந்தி பேசிய கடைக்காரர் ஒருவரை மராத்தியில் பேசுமாறு அடித்து உதைத்த விடியோ அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது மகாராஷ்டிரத்தில் உள்ள ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது பஹல்காம் தாக்குதலைப் போன்றது என்று பாஜக விமர்சித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm