நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு

புது டெல்லி:

F&O பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதித்து  பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், F&O பங்குச்சந்தை பெரிய நிறுவனங்களின் களமாகிவிட்டது. அவர்களின் முறைகேடுகளால் சிறிய முதலீட்டாளர்களின் பணம் தொடர்ந்து சுரண்டப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் F&O சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகளை முறைகேடாக கையாண்டதாக செபி சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பிரதமர் மோடி  மவுனம் சாதிக்கிறார். மோடி அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி, சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset