
செய்திகள் மலேசியா
இனவாதத்தை தூண்டும் விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்; ஒற்றுமையே மலேசியர்களின் வலிமை: டத்தோஸ்ரீ ஜம்ரி
மஞ்சோங்:
நாட்டில் இனவாதத்தை தூண்டும் விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் காலக் காலக் காலக் காலக் காலக் காலக் கூறினார்.
மஞ்சோங் வீர பொழுதுபோக்குக் கழகத்தின் அறிமுக விருந்துபசரிப்பில் கலந்து கொண்டேன்.
துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி, கழகத்தின் தலைவர் ராஜசேகரன் அழைப்பின் பேரில் இங்கு வந்தேன்.
இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. காரணம் பல்லின மக்கள் ஒரே இடத்தில் திரண்டுள்ளனர்.
இது தான் மலேசியர்களின் ஒற்றுமை. இதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.
இவ்விழாவை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.
மேலும் மஞ்சோங் வீர பொழுதுபோக்குக் கழகம் முறையாக செயல்பட வேண்டும். குறிப்பாக உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு உதவ வேண்டும். இது தான் எனது வேண்டுகோள்.
அதே வேளையில் ஒற்றுமையாக இருக்கும் மலேசியர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக சமூக ஊடகங்களில் அதிகமாக இதுபோன்ற இனவாத சம்பவங்கள் நடக்கிறது.
இதுபோன்ற விவகாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஒற்றுமை தான் மலேசியர்கள் வலிமை.
இவ்விவகாரத்தில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am