செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் 3,000 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் கிட்டத்த 3,000 இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பார்கள்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கீர் போட்டியிடுகிறார்.
அவரை இத்தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 3,000 இந்திய வாக்காளர்கள் ஆதரிப்பார்கள்.
தாபா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தேசிய முன்னணி தேர்தல் கேந்திரம் தேர்தல் காலத்தில் மட்டுமல்ல,
அனைத்து இன மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் உழைத்து வந்தது தான் இதற்குக் காரணம்.
வேலை செய்யு வரை நாங்கள் தேர்தல் காலம் காத்திருக்க மாட்டோம்.
திடீர் வெள்ளம், சேதமடைந்த சாலைகள் அல்லது பள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் களத்தில் இறங்குவோம்.
அதைத் தவிர, கட்சி தேர்தல் கேந்திரங்களுக்கிடையேயான ஒற்றுமை உணர்வு தான் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணி கோட்டையாகவே உள்ளது.
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மஇகா, அம்னோ, மசீசா ஆகிய மூன்று வேட்பாளர்களையும் மக்கள் வெற்றியடைய செய்தனர்.
இது இந்திய, மலாய், சீன சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை உணர்வு நிரூபிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வரும் இடைத் தேர்தலிலும் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
சிலாங்கூர் சாலைகளில் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போக்குவரத்துத் துறை
March 30, 2026, 11:01 am
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
கிளாந்தான் ஆற்றில் நீர்மட்டம் சரிவு: சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
March 30, 2026, 10:18 am
அல்-சுல்தான் அப்துல்லாவிற்கு தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இல்லை: பகாங் அரண்மனை அறிவிப்பு
March 30, 2026, 10:14 am
காரிலிருந்து வாணவேடிக்கை பட்டாசு வெடித்ததாக நம்பப்படும் நால்வர் கைது
March 30, 2026, 9:31 am
