செய்திகள் இந்தியா
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
புதுடெல்லி:
யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் அரிய கையெழுத்துப் பிரதிகள் கொண்ட பகவத் கீதையும் பரத முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரமும் சோ்க்கப்பட்டுள்ளன.
உலக அளவில் கலாசார-பாரம்பரிய தொன்மைமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, உலக நினைவுப் பதிவேட்டைக் கடந்த 1993ஆம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ உருவாக்கியது. கையால் எழுதப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை அப்பதிவேட்டில் இணைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து புதிதாக 74 பாரம்பரிய ஆவணங்கள் அதில் சோ்க்கப்பட்டன.
இதன்மூலம், ‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் இருக்கும் மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 570ஆக உயா்ந்துள்ளது.
“கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை மகராஷ்டிராவில் இருக்கும் பண்டாா்கா் ஓரியண்டல் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கிறது.
அந்நூல் கந்தா்வ வேதம், நாட்டிய வேதம் எனவும் அறியப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 1:02 pm
ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: குறைந்தது 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026, 12:09 pm
தூதரகப் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி: ஈரானைக் கடந்து தாயகம் திரும்பும் இந்தியக் கப்பல்கள்
March 15, 2026, 4:47 pm
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
