
செய்திகள் மலேசியா
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தாய்லாந்துக்கான அதிகாரப்பூர்வ பயணம், அண்டை நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.
இது மியான்மரில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
தாய்லாந்து பிரதமர் பேதோங்டர்ன் ஷினவத்ராவுடனான சந்திப்பில், வர்த்தகம், முதலீடு மற்றும் எல்லைப் பகுதிகளின் மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டதாக அன்வார் கூறினார்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், முதலீடு மற்றும் பிராந்திய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஆற்றலை ஆராய்வதற்கான வழிகளையும் திறந்துள்ளன என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஆசியான் 2025 தலைவராக மலேசியா, ஆசியான் கட்டமைப்பின் கீழ் மியான்மர் மக்களுக்கு நிலையான மற்றும் கண்ணியமான தீர்வுகளைக் கண்டறிவதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று அவர் கூறினார்.
மலேசியாவை பிராந்தியத்தில் விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றும் குறிக்கோளுக்கு இணங்க, உயர்தர முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தாய்லாந்தைச் சேர்ந்த முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் தலைவர்களுடன் அன்வார் சந்திப்புகளையும் நடத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:23 pm
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm