நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியில் மஇகா இணைந்ததை டத்தோஶ்ரீ சரவணன் நிராகரித்தார்

தாப்பா:

தேசியக் கூட்டணி  பொதுச்செயலாளர் தக்கியூடின் ஹசான்,  மஇகா அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துவிட்டதாகக் கூறியுள்ள கூற்றை மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை.

தேசியக் கூட்டணியில் சேருவது குறித்து எம்ஐசி எந்த முடிவும் எடுக்கவில்லை. முதல் நாளிலிருந்தே நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

இந்த விவகாரத்தில் மத்திய செயலவை தான் முடிவெடுக்கும். மேலும் மத்திய செயலவை இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை.

தேசியக் கூட்டணியில் சேருவதற்கு மஇகா எந்த விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யவில்லை.

மாறாக ஒரு கூட்டணிக் கட்சியாக இருப்பதன் விளைவுகள் குறித்து விசாரித்ததாகவும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.

அப்போதைய தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின், மஇகாவை தேசியக் கூட்டணியில் சேருமாறு ஒரு வாய்ப்பை வழங்கினார்.

எனவே நாங்கள் ஒரு விசாரணை, ஆய்வு அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்தோம்.

மேலும்  இன்று இரவு மஇகா  தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கும் தக்கியூடினுக்கும் இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து தனக்குத் தெரியாது.

அப்படி இருந்தால்  தலைவர் என்னிடம் சொல்லியிருப்பார் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset