நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா இப்போது தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளது: தக்கியூடின்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியில் சேர மஇகாவின் விண்ணப்பம் கடந்த சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியூடின் ஹசன் அறிவித்தார்.

அதிகாரப்பூர்வ கடிதம் இன்று இரவு மஇகா தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்படும்.

மஇகாவின் நுழைவு கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் கடந்த சனிக்கிழமை தேசியக் கூட்டணி கூட்டத்தில், கட்சியின் நுழைவு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதுவரை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாக உள்ளது என்று கோத்தா பாருவில் நடந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் கூறினார்.

ஐந்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட கட்சிகளை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

அவரது கூற்றுப்படி, பல்வேறு கட்சிகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டதால், புதிய தேசியக் கூட்டணி தலைமை மிகவும் உள்ளடக்கியதாக விண்ணப்பம் கண்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset