
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்புச் சந்தை செலயாங்கில் நடைபெறுகிறது; 4000 பேருக்கு வேலை வாய்ப்புகள்: பாப்பாராயுடு
செலயாங்:
சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புச் சந்தை இன்று மிகப்பெரிய அளவில் செலாயாங், டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டிற்கான முதல் நிகழ்வாக விளங்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் ரெடிகேர், கார்ஸம், செங்ஹெங், 99 ஸீபீட்மார்ட், சப்வே உள்ளிட்ட நிறுவனங்கள் 4,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை, அரசு துறைகளின் கண்காட்சி, ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை, இலவச மருத்துவ பரிசோதனை ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் ஆண்டு இறுதிவரை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் கைதிகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவதாக அவர் கூறினார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, உற்பத்தி, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி சிறப்பு வருகை தந்து இந்த வேலை வாய்ப்பு சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm
பிரதமரின் தாய்லாந்து பயணம் இரு நாடுகளுக்கிடையே புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது
April 19, 2025, 11:47 am
மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி: அயூப் கான்
April 19, 2025, 11:46 am