
செய்திகள் மலேசியா
பேரா மாநில சட்டமன்றம் ரஸ்மானை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது
ஈப்போ:
பேரா மாநில சட்டமன்றம் எதிர்க்கட்சித் தலைவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா உடனடியாக ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தை இன்று பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியோ தாக்கல் செய்தார்.
இதனை ரங்குப் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா ஆதரித்தார்.
கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று சட்டமன்ற உரிமைகள், சுதந்திரக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் ரஸ்மான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குழுவின் அறிக்கையை சான்றளிக்கும் தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm