நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்சி என்ற குடும்பத்தின் ஒரு பகுதியாக என்னைப் பாருங்கள்; தலைவரின் மகளாக பார்க்காதீர்கள்: நூருல் இஸா

கோலாலம்பூர்:

கெஅடிலான் என்ற குடும்பத்தின் ஒரு பகுதியாக என்னை பாருங்கள். தலைவரின் மகளாக பார்க்க வேண்டாம் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா கூறினார்.

அரசியல் வழிமுறைகள் மூலம் மக்களைப் பாதுகாப்பதற்கான நான்  போராட்டத்தைத் தொடர வேண்டும்.

அதற்கு  மே 24 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் அந்தப் பதவியை நிரப்ப வாய்ப்பளிக்க வேண்டும்.

பிரதமரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் என்ற அடையாளத்தின் நிழலிலிருந்து தப்பிப்பது தனக்கு கடினமாக இருக்கிறது.

இருப்பினும், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு கட்சி நிறுவப்பட்டதிலிருந்து கெஅடிலான் குடும்பத்தின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அடிமட்ட உறுப்பினர்கள் அவரைப் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன்.

ஒரு கட்சித் தலைவராக கெஅடிலான் கட்டமைப்பிற்குள் போராட்டத்தைத் தொடர, நிச்சயமாக ஒருவரின் மகள் என்ற எனது அடையாளத்திலிருந்து நான் எங்கும் தப்பி ஓட முடியாது.

அதே நேரத்தில் கெஅடிலானில் நாங்கள் ஒன்றாக இருக்கும் காலத்தில், அவர்கள் என்னை தலைவரின் மகளாக மட்டும் பார்க்காமல், கட்சித் தொண்டர்களும் உறுப்பினர்களும் குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset