நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைவானில் லாபகரமான முதலீட்டு திட்டத்தால் கவரப்பட்ட மலேசியப் பெண் கிட்டத்தட்ட 600,000 ரிங்கிட்டை இழந்தார்: போலிஸ்

நீலாய்:

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து தைவானில் உள்ள ஒரு முதலீட்டுத் திட்டத்தின் லாபகரமான வருமானத்திற்கு  மயங்கிய மலேசியப் பெண் 579,110  ரிங்கிட்டை இழந்தார்.

நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் இதனை தெரிவித்தார்

சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, முதலீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட விண்ணப்பம் அணுக முடியாததாகி விட்டது.

மேலும் பாதிக்கப்பட்டவர் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்கத் தவறிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

நேற்று காலை பாதிக்கப்பட்டவரிடமிருந்து போலிஸ் புகார் பெறப்பட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு 50 வயது, அவர் நீலாய்யில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி மனிதவள மேலாளராகப் பணிபுரிகிறார்.

பாதிக்கப்பட்டவர் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி தைவானில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இணைய முதலீட்டுத் திட்டத்தை வழங்கிய ஒரு நபருடன் தான் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் கட்டம் கட்டமாக பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலிஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset