நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வாக்காளர்களை கவர தேசிய முன்னணி முயற்சிக்கும்: ஹசான்

தாப்பா:

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர தேசிய முன்னணி தொடர்ந்து  முயற்சிக்கும்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களின்  ஆதரவைப் பெற முயற்சிக்கும்.

தற்போதைய பிரச்சினைகள், கட்சியின் வழிகாட்டுதல் குறித்து உரையாடல் அமர்வுகள், வெளிப்படையான விளக்கங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை இந்த முயற்சி தேவை.

இளைஞர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கவோ அல்லது அடிப்படையற்ற அரசியல் கருத்துக்கு பலியாகிவிடவோ அனுமதிக்கக்கூடாது.

பத்துதீகா மாவட்ட வாக்குப்பதிவு மையத்தில் தேசிய முன்னணி தேர்தல் கேந்திர பணிகளை ஆய்வு செய்ய களத்திற்குச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset