நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங் கத்தியால் வெட்டப்பட்டார்; பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்: போலிஸ்

சிரம்பான்:

பேரங்காடியில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்  பழிவாங்கும் நோக்கில் நடந்திருக்கலாம்.

சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹத்தா சே டின் இதனை கூறினார்.

நேற்று இரவு இங்குள்ள ஒரு பேரங்காடியில் நடந்த ஒரு சம்பவத்தில், சந்தேக நபர் ஒருவர்  பாராங் கத்திய பயன்படுத்தி ஒருவரை கடுமையாக வெட்டினார்.

மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம் ஒரு வளாகத்தின் சிசிடிவியில்  பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானது.

நெரிசலான பகுதியில் பாராங்கத்தியால் ஒருவர் பாதிக்கப்பட்டவரை சாதாரணமாக வெட்டுவதைக் காட்டியது.

பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக தனது தரப்பினர் நம்புவதாகக் கூறினார்.

இரவு சுமார் 8.15 மணியளவில் நடந்த 40 வயது நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிய சம்பவம் குறித்து  போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்டவர் புகைபிடித்துக்கொண்டே தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset