நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டு மக்களிடையே ஒற்றுமை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் வாழ்த்து

கோலாலம்பூர்: 

மலேசியாவில் உள்ள சீக்கிய சமூகத்தினர்கள் வைஷாக்கி நாளை வரவேற்கும் வேளையில் மலேசிய இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் சித்திரை புத்தாண்டு கொண்டாடுகின்றனர். 

சித்திரை புத்தாண்டு, வைஷாக்கி புத்தாண்டுகளை முன்னிட்டு இதனை கொண்டாட்டும் சீக்கிய மற்றும் தமிழ் மக்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர் 

இனம், சமயம், மதம் என்று பாராமல் நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வோடு நாட்டு மக்கள் பயணித்து வருகின்றனர். இதுவே மலேசியாவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவித்தார் 

இவ்வாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்வாழ்வு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார் 

தமிழர்கள் நாளை ஏப்ரல் 14ஆம் தேதி  சித்திரை புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். மலையாள சமூகத்தினர் விஷு புத்தாண்டையும் சீக்கியர்கள் வைஷாக்கி புத்தாண்டையும் கொண்டாடுகின்றனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset