நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் அப்துல்லாஹ் உன்னதமான, அமைதியான அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்: ஜாஹித்

புத்ராஜெயா:

மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் உன்னதமான, அமைதியான ஆன்மாவைக் கொண்ட ஓர் அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவார்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

துன் அப்துல்லாஹ் படாவி அமைதியான தலைமைத்துவம் கொண்டதுடன் மக்களின் நலன்களை எப்போதும் முன்னுரிமையாகக் கொண்ட ஓர் அரசியல் தலைவர் ஆவார்.

நேர்மை,  இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையில் நிர்வாகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதில் மறைந்தவரின் பங்களிப்புகளும் சேவைகளும் தேசிய வரலாற்றில் பொறிக்கப்படும்.

மலேசியாவின் 5ஆவது பிரதமரான துன் அப்துல்லாஹ் அஹமது படாவி, தேசிய இதய நிறுவனத்தில் மாலை 7.10 மணிக்கு இறைவனிடம் மீண்டார் என்ற செய்தியை அறிந்ததும்,

நானும் அனைத்து மலேசியர்களும் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம் என்று அவர் கூறினார். அவருக்காக நாம் பிரார்த்திப்போம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset