நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் ஒருபோதும் புறக்கணிக்காத பிரதமராக துன் அப்துல்லாஹ் படாவி விளங்குகிறார்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

இந்திய சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் ஒருபோதும் புறக்கணிக்காத பிரதமராக மறைந்த  துன் அப்துல்லாஹ் படாவி விளங்குகிறார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மது படாவியின் மறைவை நாட்டிற்கு பெரும் இழப்பு.

இந்திய சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் அவர் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மேலும் அவரது அமைதியான, உன்னதமான ஆளுமையாகும்.

சவாலான சகாப்தத்தில் நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்திய மிதமான தன்மை, வெளிப்படைத்தன்மை, நல்லிணக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தை வழங்கிய ஒரு அரசியல்வாதியாக துன் அப்துல்லாஹ் படாவி தொடர்ந்து நினைவுகூரப்படுவார்.

நாட்டின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

இந்திய சமூகத்தின் சூழலில், அவர் இந்த சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.

துன் அப்துல்லாஹ் படாவியின் அக்கறை அவரது உள்ளடக்கிய அணுகுமுறை நியாயமான கொள்கைகள், திறந்த மனதுடன் கேட்கும் விருப்பம் ஆகியவற்றிலிருந்து தெளிவாகத் தெரிகிறது

மறைந்து துன் அப்துல்லாஹ் அஹமது படாவியின் முழு குடும்பத்தினருக்கும் மஇகா தனது உண்மையான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset