நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரா கல்வி நிறுவனத்தில் இணைய இணைப்பை மேம்படுத்த RM200 மில்லியன் ஒதுக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர்: 

மாரா கல்வி நிறுவனத்தில் இணைய இணைப்பை மேம்படுத்த RM200 மில்லியன் ஒதுக்கப்படும் என்று  தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி மூலம் இந்த நிதி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

200 மில்லியன் ரிங்கிட் நிதியில் 150 மில்லியன் ரிங்கிட் நிதிக்கு முன்பே ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். 

இணைய சிக்கல்களைத் தீர்க்க கூடுதலாக 50 மில்லியனை ஒதுக்குமாறு தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்,

இந்த இணையச் சேவையை மாணவர்கள் குற்றச் செயலில் ஈடுப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.

பாதுகாப்பான இணையத்தை மேம்படுத்த மாரா கல்வி நிறுவனம் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் எம்சிஎம்சியுடன் இணைந்து செயல்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார், 

ஜனவரி மாதம், நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது பல்கலைக்கழகங்களிலும் இணைய இணைப்பை மேம்படுத்துவதற்காக எம்சிஎம்சி மூலம் தனது அமைச்சகம் 600 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

இந்த திட்டம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset