நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹஜ் யாத்திரை மோசடிகள் அதிகரிப்பு: சிலாங்கூர் சுல்தான் வருத்தம்

ஷா ஆலம்:

நாட்டில் ஹஜ் யாத்திரை மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா கூறினார்.

தனிப்பட்ட லாபத்திற்காக சக முஸ்லிம்களை ஏமாற்றும் அளவுக்கு பேராசை கொண்ட முஸ்லிம்கள் நம்மிடையே வளர்ந்துள்ளது வேதனை அளிக்கிறது. சகோதர முஸ்லிம்களியே சுரண்டுபவர்கள் இருப்பது இன்னும் வருத்தமளிக்கிறது.

எனவே முஸ்லிம்களை ஏமாற்ற ஹஜ் விவகாரத்தை பயன்படுத்தும் தனிநபர்கள் அல்லது சுற்றுலா நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஹஜ், உம்ரா யாத்திரைகளுக்கு அதிகாரிகளால் உரிமம் பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், நிறுவனங்களுடன் மட்டும் பரிவர்த்தனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக ஹஜ்ஜின் புனிதத்தை முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset