நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: 270 வீட்டு உரிமையாளர்கள் வீடு திரும்ப அனுமதி

கோலாலம்பூர்:

புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 270 வீட்டு உரிமையாளர்கள் நேற்று இரவு முதல் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அனைத்து வீடுகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, நேற்று சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 

அனைத்து வீடுகளிலும் தற்போது மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் வழக்கம் போல் செயல்படுகிறது. 

270 வீட்டின் உரிமையாளர்களும் தங்கள் வீடுகளை உடனடியாக பழுதுபார்க்க விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் பழுதுபார்ப்பு பணிகளைத் தொடர நாங்கள் அவர்களை அனுமதித்துள்ளோம்.

சேதங்களின் அளவு மற்றும் மதிப்பை நாங்கள் மதிப்பிடுவோம், மேலும் அவை மிகவும் குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டால், மீட்புக் குழு ஒரு முடிவை எடுத்த பிறகு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், முழுமையாக சேதமடைந்த 81 வீடுகளை பொதுப்பணித் துறை (JKR) மற்றும் சுபாங் ஜெயா நகர சபை (MBSJ) ஆகியவை தற்போது மதிப்பீடு செய்து, அவற்றை இன்னும் சரிசெய்ய முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றன என்று அமிருடின் கூறினார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் வீடுகளுக்கான பழுதுபார்ப்பு குறித்து விவாதிக்க அடுத்த திங்கட்கிழமை வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சர் ங்கா கோர் மிங்கைச் சந்திப்பதாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset