நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இரு புத்தகங்களுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்தது 

புத்ராஜெயா: 

பொது நலன், பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இரு புத்தகங்களை உள்துறை அமைச்சு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது 

1984 அச்சு ஊடக, பதிப்பக சட்டத்தின் கீழ் இந்த தடையுத்தரவு கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டதாக செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது 

நாட்டு மக்களின் பொது அமைதியை சீர்குலைக்க தடுக்க இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சு எடுத்துள்ளது 

THE GOAL OF THE WISE & THE GOSPEL OF THE RISER OF THE FAMILY OF MOHAMMED ஆகிய இந்த இரு புத்தகங்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களாகும். 

பொதுநலன் கருதி செக்‌ஷன் 301இன் கீழ் இவ்விரு புத்தகங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.  மேலும், இவ்விரு புத்தகங்களும் படிப்பதற்கு ஏற்ற புத்தகங்களாகவும் இல்லை என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்தது 

தடையை மீறி புத்தகங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset