நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலிஸ் துறையை மக்கள் நம்ப வேண்டும்: சைபுடின்

சுபாங்ஜெயா:

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதில் போலிஸ்படையை பொதுமக்கள்  முழுமையாக நம்ப வேண்டும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.

இந்த துயர சம்பவத்தின் தொடக்கத்திலிருந்தே  போலிசார் ஈடுபட்டிருந்தனர். இப்போது வரை அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எனக்கு அவ்வப்போது போலிஸ் துறையினரிடமிருந்து சமீபத்திய தகவல்கள் வரும். போலிஸ் துறை அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய விசாரணையை முடிக்கட்டும்.

ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சிகளுக்கு நல்ல விசாரணை, ஒழுக்கம் தேவை.

எனவே, போலிஸ் துறை தங்கள் பணியை முடிக்கும் என்று பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset