நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிவி ரைட் இலவச பயண சேவையை வழங்குகிறது: கபீர் மாண்ட்

சுபாங்ஜெயா:

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஜிவி ரைட் இலவச பயண சேவையை வழங்குகிறது.

ஜிவி ரைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மாண்ட் இதனை தெரிவித்தார்.

உள்ளூர் இ-ஹெய்லிங் சேவை வழங்குநரான ஜிவி ரைட் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக தற்போது சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவு வழங்குவது தான் இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

நம்பகமான போக்குவரத்திற்கான அவசரத் தேவையை உணர்ந்து,

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் வேலை, பள்ளி, மருத்துவ சந்திப்புகள், பிற அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்ல உதவும் வகையில் ஜிவி ரைட் இலவச சேவையை வழங்குகிறது.

இம்முயற்சி ஜிவி ரைட்டின் சமூக ஆதரவுக்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

மேலும் அன்றாட வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுவதை மிகக் குறைவாக உறுதி செய்கிறது.

இதன் மூலம் சமூகத்துடன் எப்போதும் இருப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை ஜிவி ரைட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை உறுதி செய்வதற்கும், மக்களின் ஆதரவை திருப்பித் தருவதற்கும் எங்கள் வழி இதுவாகும்.

இந்த திட்டத்தை ஒருங்கிணைக்க சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் எங் ஷீ ஹான், நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் ஜிவி ரைட் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று கபீர் மாண்ட் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset