நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் நாடு திரும்புவதால் ரந்தாவ் பஞ்சாங் ஐசிகியூஎஸ் வளாகத்தில் நெரிசல் தொடங்கியது

ரந்தாவ் பஞ்சாங்:

ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் நாடு திரும்புவதால் ரந்தாவ் பஞ்சாங்  குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ஐசிகியூஎஸ்) வளாகம் நெரிசல் தொடங்கியுள்ளது.

நோன்பு பெருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ளது.

இப்பெருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தாய்லாந்து மக்கள் தங்களின் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இதனால் ரந்தாவ் பஞ்சாங்க் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல்,  பாதுகாப்பு (ICQS) வளாகம் தாய்லாந்து குடிமக்களால் நிரம்பியுள்ளது.

இன்று எல்லை வாயிலில் நடத்தப்பட்ட ஆய்வில், கோலாலம்பூர், குவாந்தான், மலாக்கா, ஜொகூர் பாரு போன்ற பல்வேறு இடங்களிலிருந்து வந்த மக்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலிக்கு முன்னால் கூடத் தொடங்கினர் என்பது கண்டறியப்பட்டது.

மலேசியா-தாய்லாந்து எல்லையைக் கடக்க இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்ததால் சாலை நெரிசலாக இருந்தது, இதில் தனியார் கார்கள், வாடகை வேன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset