நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (GLCs) கீழ் உள்ள நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். 

இதுவரை, சிறிய எண்ணிக்கையிலான GLICs மற்றும் GLCs மட்டுமே மூடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

முறையான ஆவணங்களும் நோக்கங்களை பூர்த்தி செய்ய தவறியதால் அரசின் கீழிருந்த சில நிறுவனங்கள் மூடப்பட்டன என்றார் அவர்.

ஒரு நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாலும் எந்த நன்மையும் இல்லை என்று அன்வார் கூறினார்.

இந்த நடைமுறை பயனற்றது என்றும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம் என்று அவர் நாடாளுமன்றத்தில் மேலும் கூறினார்,

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset