செய்திகள் மலேசியா
அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் பினாங்கின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்: சாவ் கோன் இயோ
ஜார்ஜ் டவுன்:
பினாங்கு மாநில புதிய ஆளுநர் அம்மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று பினாங்கு மாநில அரசியலமைப்பில் எந்தக் கட்டாயமும் இல்லை என்று முதல்வர் சாவ் கோன் இயோ கூறினார்.
ஆளுநர் நியமனம் தனிநபரின் அந்தஸ்தின் அடிப்படையில் இருக்காது.
மாறாக, அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் ஆளுநர் நியமிக்கப்படும் என்று அவர் இன்று கோம்தாரில் உள்ள தனது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று, இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, பிரதமர் அலுவலகத்திற்கு பரிசீலனைக்காக ஆளுநர் வேட்பாளர்கள் பட்டியலை சமர்ப்பித்ததாகச் சாவ்கூறினார்.
பினாங்கு யாங் டி-பெர்டுவா நெகிரியின் நியமனம் யாங் டி-பெர்டுவா அகோங்கின் விருப்பப்படி உள்ளது, எனவே அவர் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:11 pm
அக்டோபரில் தேர்தலை எதிர்கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் தயாராகிறார்: புளூம்பர்க்
April 24, 2026, 11:09 pm
பொறாமையின் காரணமாக முன்னாள் கணவரால் மியன்மார் பெண் கத்தியால் குத்திக் கொலை
April 24, 2026, 11:08 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் மரணமடைந்த வங்காளதேச ஆடவருக்கு நீதி கோரும் இணையவாசிகள்
April 24, 2026, 11:06 pm
விசாரணையைத் தொடர்ந்து படினி, அதன் துணை நிறுவனங்களின் பல வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி முடக்கியுள்ளது
April 24, 2026, 6:03 pm
எல் நினோ இந்த ஆண்டு நடுப்பகுதியில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது: ஐ.நா.
April 24, 2026, 4:03 pm
