நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது

கோலாலம்பூர்:
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை 6.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா ஓர் அறிக்கையில் கூறியது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.

இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அவர் இன்று முகநூல் ஒரு பதிவில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset