நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கேஎல்ஐஏவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

சிப்பாங்:

ஜாகர்த்தாவிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துக் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மலேசிய வான் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோராஸ்மான் மஹ்மூத் இதனை தெரிவித்தார்.

போயிங் 737-800 விமானத்திலிருந்து மாலை 6.02 மணிக்கு அவசர சமிக்ஞை பெறப்பட்டது.

இதை  அடுத்து எம்எச் 720 விமானம் கேஎல்ஐஏவில்  உள்ள ஓடுதளம் 32 ஆரில் மாலை 6.17 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தை விரைவில் தரையிறக்க அனுமதிப்பதன் மூலம் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

மலேசிய ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ​​விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மார்ச் 14 அன்று, மணிலாவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், அதன் ஒரு இயந்திரம் தீப்பிடித்ததாகக் கூறப்பட்டதால், அதைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், எம்எச் 705 விமானம் மணிலாவில் உள்ள நினாய் அகினோ சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திரும்பப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset