
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
புத்ராஜெயா:
ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அளித்த அறிக்கையின் பதிவு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சப்ரி இன்று கலந்து கொள்ள முடியாததால் நாளை அது தொடரவுள்ளது. ஆனால் அதற்கான காரணம் விளக்கப்படவில்லை.
நாளைக்கான நேரமும் நிர்ணயிக்கப்படவில்லை, என்று எம்ஏசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐந்தாவது முறையாக எம்ஏசிசியில் வாக்குமூலம் அளிக்க இஸ்மாயில் சப்ரி ஆஜராகவிருந்த நிலையில், அவரது முன்னேற்றங்களைக் கண்காணிக்க காலை 9 மணி முதலே ஊடகவியலாளர்கள் எம்ஏசிசிக்கு வெளியே முகாமிட்டனர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது அதிகாரிகள் சமீபத்திய தகவல் மற்றும் உளவுத்துறை கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இஸ்மாயில் சப்ரி மீதான விசாரணை தொடர்பாக பல புதிய கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டிய பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:17 pm
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கேஎல்ஐஏவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
March 18, 2025, 10:15 pm
வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து
March 18, 2025, 10:12 pm
காசாவில் மாபிம் பணியாளர்களுக்கு எதிரான மிருகத்தனத்தை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்
March 18, 2025, 10:10 pm
15 பாலஸ்தீன கைதிகளை அழைத்து வர மலேசியா தயாராக உள்ளது: முஹம்மத் ஹசான்
March 18, 2025, 8:54 pm
தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்
March 18, 2025, 8:53 pm
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
March 18, 2025, 8:49 pm