நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மக்கள் முதல்வரின் மனிதநேய விழா 2025 வித்தியாசமாக, விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. 

யாதும் ஊரெனச் சொல்வோமே, உலகை உறவாக்கிக் கொள்வோமே எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தப் புகழரங்கம் நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு பேசியதில் மகிழ்ச்சி.

தமிழக முதல்வர் சிறந்த முறையில் தமிழ்நாட்டை வழிநடத்தி வருவதோடு, உலகத் தமிழர்களையும் அரவணைத்து வருவது போற்றத்தக்கது. 

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு - குறள் 385 

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, 

அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக  சென்னையில் இன்று நடைபெற்ற  மகளிர் தின விழாவில் கல்லூரியில் பயிலும் 1500 மாணவிகள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டத்தோஸ்ரீ சரவணனை  சென்னை பெரு நகர மேயர்  பிரியா ராஜன்  சிறப்பித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset