
செய்திகள் மலேசியா
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
கோலாலம்பூர்:
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் இடத்தை நிரப்ப டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை முதன்மை தேர்வாக உள்ளார்.
டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் இரண்டு ஆண்டுகள் தேசிய போலிசஸ்படைத் தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.
அவரின் பதவிக் காலம் வரும் இந்த ஜூன் மாதத்துடன் ஒரு நிறைவுக்கு வருகிறது.
இதுவரை, அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா அல்லது அவரது இடத்தை அவரது துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாரம்பரியமாக போலிஸ்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அயோப் கான் (வயது 59). ரசாருடின் (வயது 62) விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்ப முக்கிய தேர்வாகக் கருதப்படுகிறார்.
எப்படியிருந்தாலும் இந்த ஜூன் மாதம் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், போலீஸ் படை ஆணையக் கூட்டத்தின் விளைவாக முன்மொழியப்பட்ட நபர்களை அங்கீகரிக்கும்போது, இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்.
இதனிடையே புக்கிட் அமானில் உள்ள ஆறு துறை இயக்குநர்கள் இந்த ஆண்டு ஓய்வு பெறும்போது, போலிஸ்படை பெரிய அளவிலான தலைமை மாற்றத்தையும் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm