
செய்திகள் மலேசியா
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்த பெண்ணுக்கு எதிராக 13 போலிஸ் புகார்கள்: ஐஜிபி
கோலாலம்பூர்:
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் எழுத்தாளரும், தொழில்முனைவருமான பெண் ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட முகநூல் பதிவு தொடர்பாக நாடு முழுவதும் 13 புகார்கள் போலிசாருக்கு கிடைத்துள்ளன.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் இதனை தெரிவித்தார்.
நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி அனைத்து புகார்களும் பெறப்பட்டது.
இது தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த ஆரம்ப புகார் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள பெரனாங் போலிஸ் நிலையத்தில் 34 வயது உள்ளூர் நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை அளித்தார்.
75 வயதான பெண் சந்தேக நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தற்போது விசாரணை நடந்து வருகிறது, கேள்விக்குரிய கணக்கின் உரிமையாளரை அழைப்பதே எங்கள் ஆரம்ப நடவடிக்கை.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி வழக்கின் ஆரம்ப விசாரணையை முடிக்க புகார்தாரரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:17 pm
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கேஎல்ஐஏவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
March 18, 2025, 10:15 pm
வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து
March 18, 2025, 10:12 pm
காசாவில் மாபிம் பணியாளர்களுக்கு எதிரான மிருகத்தனத்தை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்
March 18, 2025, 10:10 pm
15 பாலஸ்தீன கைதிகளை அழைத்து வர மலேசியா தயாராக உள்ளது: முஹம்மத் ஹசான்
March 18, 2025, 8:54 pm
தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்
March 18, 2025, 8:53 pm
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
March 18, 2025, 8:52 pm
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
March 18, 2025, 8:49 pm