
செய்திகள் மலேசியா
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
கோலாலம்பூர்:
பிரதமரின் பதவிக்கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு பதவிக்காலங்களாகக் கட்டுப்படுத்தும் திட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும்.
பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைதாவின் கூற்றுப்படி, இந்த உன்னத நோக்கத்தை குறுகிய இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம் என்று பிரதமர் எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்டினார்.
இந்த நடவடிக்கை தூய்மையான நிர்வாகத்தின் தொடர்ச்சியையும், மிகவும் ஒழுங்கான அமைப்பையும் உறுதி செய்யும்.
மேலும் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்கான இடமாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தும் அதிகார மையப்படுத்தலைத் தவிர்க்கும்.
உண்மையில் அண்டை நாடான இந்தோனேசியா போன்ற பல நாடுகள் ஏற்கனவே இந்த அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளன.
அதைத் தவிர, ஒரு தலைவரின் பிரதமர் பதவிக் காலத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை, இன்றைய மற்றும் எதிர்கால புவிசார் அரசியல் நிலப்பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இதற்கு புதிய சுவாசங்களுக்கும் தேசியத் தலைமையின் தொடர்ச்சிக்கும் இடமளிக்க அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் ஒரு உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 8:54 pm
தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்
March 18, 2025, 8:53 pm
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
March 18, 2025, 8:52 pm
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
March 18, 2025, 8:49 pm
பல்லைக்கழக மாணவியை கத்தியால் குத்திய ஆடவனுக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am