
செய்திகள் உலகம்
விமான பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டல்: அதிரடியாக கைது செய்யப்பட்ட பயணி
கொழும்பு:
சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகபர் கட்டுநாயக்க விமான நிலையப் போலிசாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது, கொழும்பு அத்துருகிரிய பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சிங்கப்பூரிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், அதிக மது போதையில் இருந்த சந்தேக நபரான பயணி விமானத்தில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக இந்த சம்பவத்தை விமானத்தின் விமானியிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் அதனை கட்டுநாயக்க விமான நிலைய பணிமனைக்கு அறிவத்துள்ளார்.
அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்து கட்டுநாயக்க போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:46 pm
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 200க்கும் அதிகமான கள்ளக்குடியேறிகள்
March 16, 2025, 6:41 pm
இலங்கை அதிபர் ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்வு
March 15, 2025, 11:55 am
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்
March 15, 2025, 10:55 am
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
March 15, 2025, 10:54 am
கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm